Pages

valluvar did not say some things about the world

வள்ளுவர் கூறாத அறம்
கள்ளுண்ணாமையில் – சங்க அகப்பாடல்கள்

 கருதிய பொருளையும் அதன் சுற்றத்தையும்  கண்மூடித்தனமாய் அழிக்கும்  
                   பொதுவாக தீய ஒழுக்கம் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளோரையும் அழிக்கும்.   கள்ளுண்ணல் அறிவை மயக்கி இன்னார் இனியார் என்று நோக்காது தான் அடையக் கருதிய பொருளைக் கண்மூடித்தனமாக வலிந்து அடையச் செய்யும். அக் கண்மூடித்தனத்தால் அடையும் பொருளோடு அதன் சுற்றத்தையும் அழிக்கும்.  – (கண்மூடித்தனமாக அடையச் செய்யும் என்பதாலேயே போருக்குச் செல்லுமுன் கள் குடித்தல் மரபாக்கப்பட்டது).