Pages

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் April Updates 2013

எல்லைக் காவல் படையில் 717 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
இந்தோ–திபெதன் பார்டர் போலீஸ் போர்ஸ் சுருக்கமாக ஐ.டி.பீ.பி. என அழைக்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காவல்படை பிரிவில் தற்போது பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் (இந்தி டிரான்ஸ்லேட்டர்), ஹெட் கான்ஸ்டபிள் (டிரெஸ்ஸர் வெட்னரி), கான்ஸ்டபிள் (அனிமல் டிரான்ஸ்போர்ட்), சப்–இன்ஸ்பெக்டர் (ஓவர்சீயர்), கான்ஸ்டபிள் (பயோனீர்), ஹெட்கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (மோட்டார் மெக்கானிக்), கான்ஸ்டபிள் (டிரைவர்) போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 717 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – பணியிடங்கள்

ராணுவ தொழிற்சாலையில் 541 வேலைவாய்ப்புகள் April Updates 2013

ராணுவ தளவாட தொழிற்சாலையில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 541 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட சாமான்களை, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் உற்பத்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் ஆவடி உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
தற்போது மகாராஷ்டிர மாநிலம் பாந்திராவில் செயல்படும் தளவாட தொழிற்சாலையில் குரூப்–சி பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 541 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – குரூப்–சி ஒர்க்கர்
பணியிடங்கள் – 541
வயது வரம்பு

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் பணி 2013 April Updates

விளையாட்டு வீரர்களுக்கு ரிசர்வ் வங்கியில் சிறப்பு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் அசிஸ்டன்ட் மற்றும் ஆபீஸ் அட்டன்டன்ட் பணிக்கு விளையாட்டு வீரர்களில் இருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் 18 பேரும், கால்பந்து வீரர்கள்9 பேரும், பேட்மிண்டன் வீரர்கள் 8 பேரும், கேரம் வீரர் ஒருவரும், டேபிள்டென்னிஸ் வீரர்கள் 8 பேரும், டேபிள் டென்னிஸ் (பெண்கள்) 4 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

என்ஜினீயர் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு 2013 April updates

என்ஜினீயரிங் சர்வீசஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 6–5–13 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. எனப்படுகிறது. மத்திய அரசின் உயரதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு நடத்தி தெரிவு செய்து வருகிறது. தற்போது ‘என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாமினேசன் 2013’ தேர்வை அறிவித்துள்ளது. இதன்மூலம் தகுதியான என்ஜினீயர்கள் மத்திய அரசுத் துறைகளில் உள்ள என்ஜினீயரிங் பணிகளில் வாய்ப்பு பெறலாம். மொத்தம் (உத்தேசமாக) 763 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வின் பெயர் : என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாம் –2013
நிரப்பப்படும் பணியிடங் கள் : 763
வயது வரம்பு
விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 1.1.13 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதைக் கடக்காதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை April 2013 updates

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 349 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கி மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. உதவி பொதுமேலாளர், சீப் மேனேஜர், சீனியர் மேனேஜர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 349 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் – ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
பணியிடங்கள் – 349
வயது வரம்பு
அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பணிக்கு 21 வயது முதல் 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சீப் மேனேஜர் பணிக்கு 43 வயதுக்கு உட்பட்டவர்களும், சீனியர் மேனஜர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.