Pages

108 அவசர ஊர்தி சேவையில் பணியாற்ற விருப்பமா? : திருவள்ளூரில் நாளை நேர்காணல்

திருவள்ளூரில் 108 அவசர ஊர்தி சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
திருவள்ளூர் டி.எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவியாளர் பணிக்கு 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி அறிவியல் சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள், செவிலியர் பிரிவு படித்தவர்கள் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.