வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

வினாத்தாள் லீக் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று நடைபெறுகிறது


 வினாத்தாள் லீக் ஆனதான் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மறுதேர்வு இன்று மீண்டும் நடைபெற்று வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக 3,687 காலி பணி இடங்கள் நிரப்பபப்டுகிறது.
வினாத்தாள் லீக்- தேர்வு ரத்து

இப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் அவுட் ஆனது அம்பலமானதால் 6 லட்சம் பேர் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மறுதேர்வு
இதனால் இன்று மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மறுதேர்வு இன்று தமிழகம் முழுவதும் 114 மையங்களில் நடைபெறுகிறது. 3,456 தேர்வுக்கூடங்களில் 6 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
முறைகேடு நடக்கும் அபாயம் உள்ள 100 மையங்கள் அடையாளம் காணப்பட்டு ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...