வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பிரசார் பாரதி நிறுவனத்தில் 1166 காலிப் பணிகள் 2013


இந்திய ஒலிபரப்பு கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர்வதற்கான தேர்வை, SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
புரோகிராம் எக்சிகியூட்டிவ் மற்றும் டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 1166 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் புரோகிராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு 360 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் பணிக்கு 806 பேரும், டிரான்ஸ்மிஷன் எக்சிகியூட்டிவ் Production Assistant பணிக்கு 72 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுவோர் பிரசார் பாரதி நிறுவன அலுவலங்களில் பணியில் அமர்த்தப்படுவர். கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் விவரங்களைப் பெற www.ssconline2.com என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரசார் பாரதி நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
புரோக்ராம் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு, எம்.ஏ., எம்.எஸ்.சி., படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இலக்கியம், நாடகக்கலை, டிபேட்டிங் ஆக்டிவிட்டிஸ், பப்ளிகேஷன்ஸ், பாப்புலர் சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் சான்றிதழ் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இது தவிர காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல மொழியறிவும் அவசியம்.
அல்லது இளநிலைப் படிப்புடன், நாடகக் கலை, இயக்கம்,

பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 2013


தஞ்சாவூரில் உள்ள பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் நிலையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் இயக்குநர், முதல்வர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய காவல்துறையில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 பணிகள் 2013


உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,240 காலிப் பணியிடங்கள் மத்திய காவல்துறையில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
மத்திய காவல் பிரிவுகளான டெல்லி போலீஸ், CAPF எனப்படும் மத்திய அதிரடிப் படை, CISF எனப்படும் தொழிலக பாதுகாப்புப் படை, NCP எனப்படும் ஆகியவற்றில் சப் இன்ஸ்பெக்டர், துணை சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. CAPF பிரிவில் ஆயிரத்து 176 காலிப் பணியிடங்கள், டெல்லி போலீஸ் பிரிவில் 330 காலிப் பணியிடங்கள், CISF-ல் துணை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 734 பணியிடங்கள் உள்ளன.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆளுமைத் தேர்வு, உடல்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் இறுதித் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கூடுதல் தகவல்களைப் பெற www.ssconline.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

பரமக்குடி நகராட்சியில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி 2013


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை பரமக்குடி நகர்மன்ற தலைவர் கீர்த்திகா முனியசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கணினி, மகப்பேறு உதவியாளர், நர்சிங் உதவியாளர், தையல், 4 சக்கர வாகன ஒட்டுநர் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணிகள் 2013


திருச்சியில் உள்ள TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன..
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் TRP பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் ஆகிய பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. சிவில், CSE, ECE, EEE, MECH, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு, DCSE, DECE, DCE, ITI Turner உள்ளிட்ட கல்வித் தகுதியை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் 2013


காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் Deans, பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. CSE, ECE, EEE, IT, EIE, Mechanical, Civil, Architechture, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013


விருதுநகர் மாவட்டத்தில், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் ஏராளமோனோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர்.
பயன் தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் : விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்
தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலைகளைப் பெறுவதற்கு ஏதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் கேம்பஸ் இண்டர்வியுக்களை நடத்தும் கலாச்சாரம் இருந்துவந்தது. தற்போது அந்த கலாச்சாரம் சற்றே பரிணாமம் அடைந்து, தங்கள் கல்லூரி மட்டுமல்லாமல், பல கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையிலான வேலைவாய்ப்புகள் நடத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது.

யுபிஎஸ்சி-யின் புதிய நடைமுறைகள் நிறுத்தி வைப்பு 2013


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.

GATE தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன 2013


கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற GATE எனப்படும் Graduate Aptitude Test in Engineering தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.
இதில் ஆந்திர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் இருந்து 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 22,400 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் உத்தரப் பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மூன்றாவது இடத்தையும், பிகார் நான்காவது இடத்தையும், கேரளா ஐந்தாவது இடத்தையும் GATE தேர்வு முடிவுகளில் பிடித்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 2013


விருதுநகர் மாவட்டத்தில் பணி நாடுநர்களுக்கு பயனளிக்கும் விதமாக, இரண்டு நாட்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகாசி அருகே தாயில்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி புதிய தலைவர் நவநீத கிருஷ்ணன்: 12ம் தேதியுடன் நட்ராஜ் ஓய்வு

 Navaneethakrishnan Is Tnpsc S New Chairman சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் 23-1-2012 அன்று நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள் 62 வயதை அடைந்தாலோ அல்லது 6 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டாலோ

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...