வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது 2013


விருதுநகர் மாவட்டத்தில் பணி நாடுநர்களுக்கு பயனளிக்கும் விதமாக, இரண்டு நாட்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிவகாசி அருகே தாயில்பட்டியில் உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முகாம் நடைபெறும்.

முகாமில், ரிலையன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ், தி ஜெயராஜ் குரூப், சார்ப், சங்வூ கெஸ்டேம்ப் ஹைடெக் பிரைவேட் லிமிடெட், பாரதி ஏர்டெல், அல்கா டெலூசண்ட் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை அளிக்க உள்ளன. மேலாண்மைப் படிப்புகள், பொறியியல் படிப்புகள் மட்டுமல்லாமல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் படித்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரியான தரணிதரனை, 95510 61713 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ளலாம். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

further details : watch puthiyathalaimurai

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...