வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Central Govt Technical Jobs : மத்திய அரசு நிறுவனத்தில் 844 தொழில்நுட்ப பணிகள் 2013


நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.–வில் 844 தொழில்நுட்ப பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு, டிப்ளமோ படிப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் டி.ஆர்.டி.ஓ. என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 360 பேரும், டெக்னீசியன் (ஏ) பணிகளுக்கு 223 பேரும், நிர்வாகப் பணியிடங்களுக்கு 261 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 844 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

கப்பல் படையில் ஆசிரியர் பணியிடங்கள் ஆண்–பெண் இருபாலருக்கும் வாய்ப்பு 2013: Indian Navy Recruitment


கப்பல்படையில் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
கப்பல்படையில் பணியாற்றுவது இன்றைய இளைஞர்களின் கனவுப் பணிகளில் ஒன்றாக இருக்கும்.  அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கப்பல்படையானது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு கல்வித் தகுதி உடையவர்களையும் தேர்வு செய்து பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கி வருகிறது.
தற்போது ‘கோர்ஸ் கமென்சிங் டிச– 2013’ பயிற்சித் திட்டத்தில் லாஜிஸ்டிக் கேடர், எஜுகேசன் பிராஞ்ச் மற்றும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன.

BSNL NEEDS DIPLOMA ENGINEERS RECRUITMENT 2013 :பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை


பி.எஸ்.என்.எல். (சென்னை) நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 123 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பாரத் சஞ்சார் நிகம் லிமிடட் (பி.எஸ்.என்.எல்.) மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். தற்போது பல்வேறு பிராந்திய கிளைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்திலும் 123 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை டெலிபோனில் 112 இடங்களும், செங்கல்பட்டு எஸ்.எஸ்.ஏ.வில் 11 இடங்களும் நிரப்பப்படுகிறது. 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித் தேர்வு 30.6.13 அன்று நடைபெறுகிறது.

முப்படை அதிகாரி பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு 2013 May Updates


முப்படை அதிகாரி பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. பல்வேறு அரசுத்துறை அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி பூர்த்தி செய்து வருகிறது. தற்போது முப்படை அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான 2–வது தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேஷனல் டிபென்ஸ் அகாடமி அன்ட் நேவல் அகாடமி எக்ஸாம் (2)–2013 என்ற இந்த தேர்வின் மூலம் மொத்தம் 355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நேஷனல் டிபென்ஸ் அகாடமிக்கு 300 பேரும், நேவல் அகாடமிக்கு 55 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வு 11–8–2013 அன்று நடைபெறுகிறது. பிளஸ்–2 படித்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 3–6–13 தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...