வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்: பிப். 16-ந் தேதி நடைபெறும்


குருப் 1 முதற்கட்டத் தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு, பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி 25 பணியிடங்களுக்கான குரூப்-1 முதற்கட்டத் தேர்வு அறிவிப்பு வெளியானது. இதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வருமான வரி துணை ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது.

விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக சமர்பிக்க டிசம்பர் 6-ந் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர், இதற்கான கால அவகாசம் ஜனவரி 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. குரூப்-1 முதற்கட்ட தேர்வு ஏற்கனவே டிசம்பர் 30-ந் தேதி நடைபெறுவதாக இருந்து பின்னர் ஜனவரி 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

group1 postpone dates 2013, 2012 - 2013 tnpsc updates, reschedule of group1 exam, exam dates tnpsc 2013, 2013 tnpsc recruitment updates, 2013 tnpsc updates, 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...