வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் 2013 May Updates


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். எல்ஐசி, லட்சுமி மில்ஸ், ஹூண்டாய், 108 ஆம்புலன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனச் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டன. தங்கள் பகுதியிலேயே நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாம், மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என முகாமில் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...