வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013 May


தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SSR பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. படிக்கும் போதே நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக முகாமில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. SSR பாலிடெக்னிக் மற்றும் SJTCS Staff Solutions நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 400 பேருக்கு, இந்த முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளது உற்சாகம் தரும் அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்
.
இந்த முகாமில், விப்ரோ, சுந்தரம் Fasteners, Micro Labs Ltd, யுரேகா ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட 18 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவன பிரதிநிதிகள் மூலம் நேர்காணல் நடத்தி ஊழியர்களைத் தேர்வு செய்தன. நகர்ப்புற மாணவர்களை விட திறமையான பலர் கிராமப் புறங்களில் உள்ளதை இந்த நேர்காணல் மூலம் தெரிந்துக் கொண்டதாக கூறுகின்றனர் தனியார் நிறுவன பிரதிநிதிகள். இந்த முகாம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்கின்றனர் கல்லூரி நிர்வாகத்தினர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும் முன்னணி நிறுவனங்களில், கிராமப்புறத்தினருக்கும் பணிகள் கிடைக்க இத்தகைய முகாம்கள் உதவிகரமாக அமையும் என்கின்றனர் சமூக நோக்கர்கள். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு, உரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராமப்புற மாணவர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...