இந்திய கடற்படையில் பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய கடற்படையில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் (யு.இ.எஸ்.) கீழ் என்ஜினீயரிங் படித்தவர்கள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளனர். இறுதியாண்டு படித்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்கள் தொழில்நுட்ப அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி போன்ற பணிகளில் நியமனம் செய்யப்படுவார்கள். திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம்
