முப்படை அதிகாரி பணியிடங்களுக்கு 509 பேர் யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் உயரதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்குத் தனித் தேர்வு நடத்துவது போலவே, இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு தகுதியான வர்களை தேர்வு செய்யவும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தற்போது ‘காம்பைன்டு டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாமினேசன்(2)–2013’ எனும் தேர்வை நடத்தி முப்படைகளுக்குத் தகுதியான 509 பேரை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. 24–6–13 தேதிக்குள்ளாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வின் பெயர் : காம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் எக்ஸாமினேசன்(2) – 2013