கப்பல் படையில் பிளஸ்–2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி காத்திருக்கிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய கப்பல் படையில், பல்வேறு பணிகளுக்கும் தகுதியானவர்களை குறிப்பிட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து பயிற்சி அளித்து பணி நியமனம் செய்கிறார்கள். தற்போது சாய்லர் எனப்படும் மாலுமி பணிக்கு 12–ம் வகுப்பு படித்தவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் 16–6–13 தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கான தகுதி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : கோர்ஸ் கமென்சிங் பிப்ரவரி 2014
பணியின் பெயர் : சாய்லர் (எஸ்.எஸ்.ஆர். – 01/2014 பேட்ஜ்)