கப்பல்படையில் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன.
கப்பல்படையில் பணியாற்றுவது இன்றைய இளைஞர்களின் கனவுப் பணிகளில் ஒன்றாக இருக்கும். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கப்பல்படையானது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு கல்வித் தகுதி உடையவர்களையும் தேர்வு செய்து பயிற்சியுடன் கூடிய பணி வாய்ப்பு வழங்கி வருகிறது.
தற்போது ‘கோர்ஸ் கமென்சிங் டிச– 2013’ பயிற்சித் திட்டத்தில் லாஜிஸ்டிக் கேடர், எஜுகேசன் பிராஞ்ச் மற்றும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன.
