பி.எஸ்.என்.எல். (சென்னை) நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 123 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பாரத் சஞ்சார் நிகம் லிமிடட் (பி.எஸ்.என்.எல்.) மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். தற்போது பல்வேறு பிராந்திய கிளைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்திலும் 123 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை டெலிபோனில் 112 இடங்களும், செங்கல்பட்டு எஸ்.எஸ்.ஏ.வில் 11 இடங்களும் நிரப்பப்படுகிறது. 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித் தேர்வு 30.6.13 அன்று நடைபெறுகிறது.
