முப்படை அதிகாரி பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:–
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. பல்வேறு அரசுத்துறை அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி பூர்த்தி செய்து வருகிறது. தற்போது முப்படை அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான 2–வது தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேஷனல் டிபென்ஸ் அகாடமி அன்ட் நேவல் அகாடமி எக்ஸாம் (2)–2013 என்ற இந்த தேர்வின் மூலம் மொத்தம் 355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் நேஷனல் டிபென்ஸ் அகாடமிக்கு 300 பேரும், நேவல் அகாடமிக்கு 55 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்வு 11–8–2013 அன்று நடைபெறுகிறது. பிளஸ்–2 படித்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 3–6–13 தேதிக்குள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
