.jpg)
உருக்காலை நிறுவனத்தில் 276 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
செய்ல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்காலை ஆணையம், இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் செய்ல் நிறுவன கிளையில் 226 டெக்னீசியன் பணியிடங்களும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் 50 டெக்னீசியன் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.
டிப்ளமோ என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
.jpg)