வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிகளுக்கு 6-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் 2013


108 ஆம்புலன்ஸ் சேவையில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 6-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறுகிறது.
உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தவறிய, 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இலகு ரக ஓட்டுநர் உரிமம் எடுத்து 5 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள ஆண்கள் மட்டுமே விண்ணபிக்கலாம்.
மருத்துவ பணியாளர் பணிக்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிகள் 2013


இந்திய ரிசர்வ் வங்கியில், உதவியாளர், அலுவலக ஏவலர் பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் உள்ளன.  விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 4 பணிடங்கள் உள்ளன. இதேப்போன்று மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் 17 நகரங்களில் மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் உள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்த பணிகளில் அமர்த்தப்படுவர்.
உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த சான்றிதழ்களின் அடிப்படையில், தேர்ச்சி முடிவு செய்யப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ரயில் கட்டணம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
அடிப்படை தகுதிகள்:

ஏப்ரல் 7-ஆம் தேதி குன்னூரில் Tea Development Officers பணிக்கான தேர்வுகள் 2013


தென்னிந்திய தேயிலை வாரியத்தில் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி Tea Development Officer தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் முதன் முறையாக தேயிலை அலுவலகங்களுக்கும், தேயிலை சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் தேர்வுகள் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வரித் துறையில் 19,000 பேருக்கு வேலை 2013


வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத சுமார் ஒரு லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித் துறை, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க தேவையான பணியில் இறங்கியுள்ளது.
வரி செலுத்தாதவர்களை கணக்கிடவும், அவர்கள் மீது நடவடிக்கை

அறிவியல் உதவியாளர், உதவிப் பொறியாளர் ஆகிய பணிகளுக்கான தேர்வு TNPSC 2013


தமிழ்நாடு அரசுத் துறைகளில் அறிவியல் உதவியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
Grade II அளவிலான அறிவியல் உதவியாளர் பணிக்கு 33 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதே போல் தொழிற்சாலைகளுக்கான உதவிப் பொறியாளர் பணிக்கு 40 காலிப் பணியிடங்கள் உள்ளன. இரண்டு பணிகளுக்கும் தேர்வு இரண்டு தாளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். அறிவியல் உதவியாளர் பணிக்கு ஜூன் மாதம் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறும்.
உதவிப் பொறியாளர் பணிக்கு ஜூன் மாதம் 9-ஆம் தேதி காலை மற்றும் மதியம் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பங்கள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை பெற www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கவும்.
இந்த தேர்வில் பங்கேற்க தேவையான அடிப்படை கல்வித் தகுதிகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...