வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label job fair in tamilnadu 2014. Show all posts
Showing posts with label job fair in tamilnadu 2014. Show all posts

விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் 2013 May Updates


விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். எல்ஐசி, லட்சுமி மில்ஸ், ஹூண்டாய், 108 ஆம்புலன்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013 May


தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள SSR பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. படிக்கும் போதே நல்ல ஊதியத்துடன் வேலை கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக முகாமில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலையில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. SSR பாலிடெக்னிக் மற்றும் SJTCS Staff Solutions நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பாலிடெக்னிக் இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 400 பேருக்கு, இந்த முகாமில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளது உற்சாகம் தரும் அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...