வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

பரமக்குடி நகராட்சியில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி 2013


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை பரமக்குடி நகர்மன்ற தலைவர் கீர்த்திகா முனியசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கணினி, மகப்பேறு உதவியாளர், நர்சிங் உதவியாளர், தையல், 4 சக்கர வாகன ஒட்டுநர் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணிகள் 2013


திருச்சியில் உள்ள TRP பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன..
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் TRP பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், துணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் ஆகிய பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. சிவில், CSE, ECE, EEE, MECH, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு, DCSE, DECE, DCE, ITI Turner உள்ளிட்ட கல்வித் தகுதியை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் 2013


காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் Deans, பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. CSE, ECE, EEE, IT, EIE, Mechanical, Civil, Architechture, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013


விருதுநகர் மாவட்டத்தில், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் ஏராளமோனோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர்.
பயன் தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் : விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்
தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலைகளைப் பெறுவதற்கு ஏதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் கேம்பஸ் இண்டர்வியுக்களை நடத்தும் கலாச்சாரம் இருந்துவந்தது. தற்போது அந்த கலாச்சாரம் சற்றே பரிணாமம் அடைந்து, தங்கள் கல்லூரி மட்டுமல்லாமல், பல கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையிலான வேலைவாய்ப்புகள் நடத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது.

யுபிஎஸ்சி-யின் புதிய நடைமுறைகள் நிறுத்தி வைப்பு 2013


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...